தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சபரிமலையில் தொடர்ந்து குவியும் பக்தர்கள் 24 நாளில் 18 லட்சம் பேர் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். இந்த மண்டல காலத்தில் நேற்று வரை கடந்த 24 நாளில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது.
Advertisement

சபரிமலையில் இந்த மண்டல காலத்தில் கடந்த வருடத்தை விட அதிக அளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சில நாட்களில் அதைவிட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

கடந்த 4 நாளில் மட்டும் 3.20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் சபரிமலைக்கு வரும் வழியில் வண்டிப்பெரியார், எருமேலி மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்து தரிசனம் செய்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நாட்களில் அதிகாலையில் நடை திறக்கும் போது பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.

நெய்யபிஷேகம் செய்வதற்கும், அப்பம், அரவணை உள்பட பிரசாதங்கள் வாங்குவதற்கும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த வருடம் மண்டல கால பூஜைகளுக்காக நடை திறந்த 24 நாளில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று இரவு வரை பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.

Advertisement

Related News