தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சபரிமலையில் உடனடி முன்பதிவு எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு: இன்று காலை வரை 6.50 லட்சம் பேர் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் கூட்டம் குறைந்ததால் உடனடி முன்பதிவு எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்த கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் முந்தைய வருடங்களை விட இந்த மண்டல காலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடை திறக்கப்பட்ட கடந்த 16ம் தேதி மாலை 5 மணி முதல் அன்று இரவுக்குள் 55 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் 18ம்படி ஏறினர். மறுநாள் 17, 18 ஆகிய தேதிகளில் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்ததால் தரிசனம் செய்வதற்கு 10 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Advertisement

இதையொட்டி தினமும் உடனடி முன்பதிவு எண்ணிக்கையை 20 ஆயிரமாக கட்டுப்படுத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபோதிலும் அதைவிட இரு மடங்கு பக்தர்களை அனுமதித்தது தான் சபரிமலையில் ஏற்பட்ட கடும் நெரிசலுக்கு காரணமாக அமைந்தது.

இதை தொடர்ந்து வரும் 24ம் தேதி வரை உடனடி முன்பதிவு எண்ணிக்கையை 5 ஆயிரமாக கட்டுப்படுத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கடந்த சில தினங்களாக சபரிமலையில் நெரிசல் குறைந்தது. பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே இன்று காலை வரை கடந்த 7 நாட்களில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 6.50 லட்சத்தை தாண்டியது. டிசம்பர் 25ம் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்துவிட்டது. இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சபரிமலையில் கூட்டம் குறைந்துள்ளதால் உடனடி முன்பதிவு எண்ணிக்கையை தேவைக்கேற்ப அதிகரித்துக் கொள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எனினும் கடந்த சில நாட்களாக கூட்டம் குறைந்தபோதிலும் உடனடி முன்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்காததால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி சென்றதாக கூறி தேவசம் போர்டு சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை பரிசீலித்த உயர்நீதிமன்றம் உடனடி முன்பதிவு எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து இன்று முதல் உடனடி முன்பதிவு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்கள் என்பதால் சபரிமலையில் இன்று காலை முதல் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News