தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சபரிமலையில் 18ம் படி அருகே மரத்தில் திடீர் தீ: உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

 

Advertisement

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. முந்தைய வருடங்களை விட இந்த சீசனில் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக புல்மேடு வழியாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை 8.20 மணியளவில் 18ம் படிக்கு அருகே நெய் தேங்காய்களை எரிக்கும் ஆழி அருகே உள்ள ஆலமரத்தில் திடீரென தீ பிடித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதுகுறித்து அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவவிடாமல் அணைத்தனர்.

மரத்தில் பொருத்தப்பட்டிருந்த எல்இடி விளக்கிலிருந்து மின்கசிவு ஏற்பட்டதால் இந்த தீ விபத்து நிகழ்ந்தது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறிது நேரத்திற்கு பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்பட வில்லை.

Advertisement

Related News