தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

எஸ்.பி.வேலுமணி மகன் திருமண வரவேற்பு: எடப்பாடியை சந்திக்காமல் புறக்கணித்த செங்கோட்டையன்

கோவைவை: கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் செங்கோட்டையன் புறக்கணித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகன் விஜய் விகாஷ்-தீக்‌ஷனா ஆகியோரது திருமணம் ஈச்சனாரி செல்வம் மஹாலில் கடந்த 3ம்தேதி நடந்தது. இவர்களது திருமண வரவேற்பு விழா கோவை பீளமேடு கொடிசியா அரங்கில் ஏ, பி, சி ஆகிய ஹால்களில் நேற்று நடந்தது. முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.

மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், விஜயபாஸ்கர், பா.ஜ., எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், நடிகர்கள் சிவக்குமார், சத்தியராஜ், நடிகை கவுதமி உள்ளிட்டோர் நேரில் வாழ்த்தினர். விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 6.30 மணியளவில் வந்தார். அரை மணி நேரம் விழா அரங்கில் இருந்தார். பின்னர், காரில் புறப்பட்டு சென்றார். அவர் சென்ற பிறகு அரை மணி நேரம் கழித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வந்தார். எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்கவே அவர் தாமதமாக வந்ததாக கட்சியினர் தெரிவித்தனர்.

Related News