தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரஷ்ய ஆயுத கிடங்கு மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: ஏவுகணைகள், வெடிகுண்டுகள் அழிப்பு

கீவ்: ரஷ்யாவின் ஆயுத கிடங்கு மீது மிக பெரிய டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் ஏவுகணைகள், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட நாட்டின் பல நகரங்கள் சின்னாபின்னமாகி உள்ளன. உக்ரைன் ராணுவம் சமீப காலமாக ரஷ்யா மீது திடீர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களால் ரஷ்ய படை பின்னடைவுகளை சந்தித்துள்ளது. இந்நிலையில்,ரஷ்யாவின் டெவர் மாகாணத்தில் டோரோபெட்ஸ் நகரில் உள்ள மிக பெரிய ஆயுத கிடங்கின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பத்திரிகை நேற்று தெரிவித்துள்ளது.
Advertisement

உக்ரைன் எல்லையில் இருந்து 500 கிமீ தொலைவில் டோரோபெட்ஸ் நகர் உள்ளது. மொத்தம், 11,000 பேர் மக்கள் தொகை கொண்ட இந்த நகரில் உள்ள ஆயுத கிடங்கை குறி வைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பல ஏவுகணைகள், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் அழிக்கப்பட்டன என்று உக்ரைன் அதிகாரி தெரிவித்தார். தாக்குதலுக்குப் பிறகு, 6 கி.மீ பரப்பளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அந்த சமயத்தில் லேசான அதிர்வுகளும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆளில்லா விமானத் தாக்குதல் நடந்த இடத்தில் ரஷ்யாவின் சொந்த ஆயுதங்களை விட வட கொரியாவின் ஏவுகணைகளும் இருந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

Advertisement