தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரஷ்ய டிரோன் தாக்குதல் எதிரொலி போலந்து பாதுகாப்பு அமைச்சர் உக்ரைன் பயணம்

கீவ்: உக்ரைன் ரஷ்யா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷ்யாவுக்கு வடகொரியா, ஈரான் நாடுகள் உதவி வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளான ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

Advertisement

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை(11ம் தேதி) ரஷ்யாவின் 10க்கும் மேற்பட்ட டிரோன்கள் போலந்து வான்வௌிக்குள் அத்துமீறி நுழைந்தது. இந்த டிரோன்களை போலந்து வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து ருமேனியா நாட்டுக்குள்ளும் ரஷ்ய டிரோன்கள் ஊடுருவியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் போலந்து தங்கள் நாட்டு டிரோன் போர் திறன்களை வலுப்படுத்துவதற்காக உக்ரைனின் உதவியை நாடி உள்ளது. போலந்து பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் விளாடிஸ்லாவ் கோசினியாக் காமிஸ் வௌியிட்டுள்ள பதிவில், “போலந்து உக்ரைன் நாட்டு பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையே பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம். இதில் டிரோன்களை இயக்குவதில் திறன்களை பெறுவதும் அடங்கும்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News