ரஷ்யாவில் 3 முறை நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்
Advertisement
பின்னர் 7.4 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுனாமி ஏற்படலாம் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது. மிகப்பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் அவசரகால அமைச்சகமும் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது. கடலோர குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கரையிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தியது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.
இறுதியில் சுனாமி ஏற்படும் ஆபத்து இல்லை என்று சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது. இதில் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த 1952, நவம்பர் 4, அன்று,காம்சட்காவில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 30 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்த போதிலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
Advertisement