தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரஷ்யாவில் 3 முறை நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்

மாஸ்கோ: ரஷ்யாவில் 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் சுனாமி ஆபத்து நீங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் காம்செட்கா தீபகற்பம் பகுதியில் பெட்ரோபாவ்லோஸ்கி-காம்சட்கி நகர் உள்ளது. இந்த நகருக்கு 144 கிமீ தொலைவில் கடலில் 5 ரிக்டர் அளவில் நேற்று முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.அதை தொடர்ந்து 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
Advertisement

பின்னர் 7.4 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுனாமி ஏற்படலாம் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது. மிகப்பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் அவசரகால அமைச்சகமும் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது. கடலோர குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கரையிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தியது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.

இறுதியில் சுனாமி ஏற்படும் ஆபத்து இல்லை என்று சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது. இதில் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த 1952, நவம்பர் 4, அன்று,காம்சட்காவில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 30 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்த போதிலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

Advertisement