தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரஷ்யாவில் துப்பாக்கி வெடிமருந்து பட்டறையில் தீ விபத்து: 11 பேர் பலி: 130 பேர் காயம்

மாஸ்கோ: ரஷ்யாவின் ரியாசான் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 130 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷிலோவ்ஸ்கி மாவட்டத்தில் உள்ள எலாஸ்டிக் ஆலையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. அவசரகால குழுவினர் இடிபாடுகளில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் இடிபாடுகளில் சிக்கிய உயிரிழந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.

இது தொடர்பாக ரஷ்யா அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;

அந்த இடத்தில் உள்ள துப்பாக்கி வெடிமருந்து பட்டறையில் தீப்பிடித்து வெடிப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து புலனாய்வாளர்கள் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மூன்று பேர் இரவு முழுவதும் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தீவிபத்து காரணமாக ரியாசான் பகுதியில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும். பிராந்தியத்தில் கொடிகள் இறக்கப்படும். கலாச்சார நிறுவனங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் பொழுதுபோக்கு நிகழ்வுகளை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என ரியாசான் ஆளுநர் பாவெல் மல்கோவ் தெரிவித்தார்.

Related News