தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிராமப்புறங்களில் வணிக உரிமம் கட்டாயம் என்பதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்

சென்னை: கிராமப்புறங்களில் வணிக உரிமம் கட்டாயம் என்பதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று வெளியிட்ட அறிக்கை: அண்மைக்காலமாக சிறு, குறு நடுத்தர வணிகர்கள், வணிக ரீதியில் பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.
Advertisement

அதிலும் குறிப்பாக வணிக உரிமக்கட்டண உயர்வு, தொழில்வரி உயர்வு, குப்பைவரி என ஒருபக்கமும், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, உணவு பாதுகாப்புச் சட்டம் இவற்றினாலும், புகையிலைப் பொருட்கள் விற்பனை என்ற பெயரில் அரசு அனுமதித்து விற்பனைக்கு கொண்டுவரப்படும் புகையிலை, பொருட்கள், பீடி, சிகரெட்டுகள் விற்பனை செய்வதினால் தவறான வழக்குகள் பதிந்து, சிறு பெட்டிக்கடைக்காரர்கள் கூட அரசு அதிகாரிகளாலும், காவல் துறையினாலும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இச்சூழலில் நேற்றைய தினம் தமிழக அரசு கிராமப்புற பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள சிறு,குறு கடைகளுக்குக் கூட உரிமங்கள் கட்டாயம் என அறிவித்திருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றது. குடும்ப சூழலில் வீட்டோடு சில்லரை வணிகம் செய்துவரும் அடித்தட்டு வணிகர்களையும் இவ்வறிவிப்பு பாதித்துவிடும் என்பதோடு,

அவ்வறிவிப்போடு இணைத்து அறிவிக்கப்பட்டிருக்கின்ற கட்டிட உறுதிச் சான்றிதழ், தீயணைப்புத்துறை உரிமம் என பல்முனை நெருக்கடிகளுக்கு சாதாரண எளிய வணிகரும் எதிர்கொள்ளவேண்டி வரும் என்பதால், தமிழக அரசு இந்த அறிவிப்பை மறுஆய்வு செய்து வணிகர்களின் நிலை கருதியும், சாமான்ய வணிகரின் வாழ்வாதாரம் கருதியும் உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

Advertisement