தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நிரந்தர ரேஷன் கடை அமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு

குன்னூர் : குன்னூர் அருகே நிரந்தர ரேஷன் கடை அமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கிய, தமிழக அரசுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வண்டிச்சோலை ஊராட்சிக்குட்பட்ட சோலடாமட்டம் பகுதியில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அப்பகுதி மக்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கோடமலை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வந்தனர்.

இதனால், அப்பகுதி மக்கள் தங்களது கிராமத்திற்கு நியாயவிலை கடை வேண்டும் என கடந்த 35 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் முறையீட்டு வந்த நிலையில் அப்பகுதியில் தற்காலிக கட்டிடத்தில் பகுதி நேர நியாயவிலைக் கடையை கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி அப்போதைய சுற்றுலாத்துறை அமைச்சரும், தற்போதைய தமிழக அரசு தலைமை கொறடாவுமான ராமசந்திரன் திறந்து வைத்தார்.

இருப்பினும் அந்த ரேஷன் கடை தற்காலிக கட்டத்தில் செயல்பட்டு வந்ததால் அதற்கென்று நிரத்தர கட்டிடம் அமைப்பதற்கு, அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின் அப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலின் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டது.

அதற்கான பூமி பூஜையும் நேற்று கிராம தலைவர் ராஜகுலேந்திரன் தலைமையில் போடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட திமுக செயற்குழு உறுப்பினர் சுனிதா, பொதுக்குழு உறுப்பினர் காளிதாசன் மற்றும் மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.