தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓடுபாதையில் ஓடியபோது ஐதராபாத் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: 79 பேர் தப்பினர்

சென்னை: சென்னையில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு, ஐதராபாத் செல்லும் தனியார் பயணிகள் விமானம், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் 74 பயணிகள், 5 விமான ஊழியர்கள் உள்பட 79 பேர் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓட தொடங்கியபோது இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.

Advertisement

இதே நிலையில், விமானம் வானில் பறப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்துவிட்டு விமானத்தை ஓடு பாதையில் நிறுத்தினார். இதையடுத்து இழுவை வாகனம் மூலம் விமானம் புறப்பட்ட இடத்திற்கு இழுத்து கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

அதன்பின் விமான பொறியாளர்கள் விமான இன்ஜின்களை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் விமானத்தை உடனடியாக பழுது பார்க்க முடியவில்லை. இதனால் பயணிகளை வேறு விமானம் மூலம் ஐதராபாத்திற்கு அனுப்ப ஏற்பாடு நடந்தது. இதனிடையே, விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை சரிசெய்யப் பட்டது. விமானம் விபத்திலிருந்து தப்பியதோடு 74 பயணிகள், 5 விமான ஊழியர்கள் என 79 பேர் அதிர்ஷ்ட வசமாக தப்பினர். இந்த சம்பவத்தால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News