தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சிங்கப்பூரில் தொடர்ந்து 14வது முறையாக ஆளுங்கட்சி வெற்றி: அரசின் மீதான மக்களின் நம்பிக்கை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தொடர்ந்து 14வது முறையாக ஆளுங்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. சிங்கப்பூர் கடந்த 1965ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து தொடர்ந்து மக்கள் செயல் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 97 இடங்களில் 5 இடங்களில் ஆளும் மக்கள் செயல் கட்சி ஏற்கனவே போட்டியின்றி வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து எஞ்சியிருந்த 92 இடங்களுக்கு கடந்த 3ம் தேதி காலை வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்களிக்க தகுதி பெற்றிருந்த 27.6 லட்சம் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் லாரன்ஸ் வோங்க் தலைமையிலான ஆளும் மக்கள் செயல் கட்சிக்கும், பிரீத்தம் சிங் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு முடிவுகள் வௌியான நிலையில் 87 இடங்களை கைப்பற்றி ஆளும் மக்கள் செயல் கட்சி இமாலய வெற்றியை பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து லாரன்ஸ் வோங்க் மீண்டும் சிங்கப்பூர் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

தேர்தல் வெற்றி குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வோங்க், “மக்கள் செயல் கட்சிக்கு தௌிவான, வலுவான ஆணையை மீண்டும் வழங்கி உள்ள சிங்கப்பூர் மக்களுக்கு நன்றி. இது அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள திடமான நம்பிக்கையின் வெற்றி” என்று தெரிவித்தார். பிரதமர் மோடி வாழ்த்து: சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள லாரன்ஸ் வோங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.