தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விதிமுறைகளை பின்பற்றாத 334 அரசியல் கட்சிகளை நீக்கியது தேர்தல் கமிஷன்: தமிழ்நாட்டில் மட்டும் 22 கட்சிகள்

புதுடெல்லி: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29ஏ விதிகளின் கீழ், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்கின்றன. தற்போது 6 தேசிய கட்சிகள், 67 மாநில கட்சிகள், 2854 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சிகள், தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என்றால் அவற்றின் பதிவு நீக்கப்படும்.

இதுகுறித்து, கடந்த ஜூன் மாதம் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் நிலவரங்கள் குறித்து மாநில தேர்தல் அதிகாரிகளிடம் தலைமை தேர்தல் ஆணையம் தகவல் கேட்டிருந்தது. இந்த தகவலின் அடிப்படையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறியதாக 345 அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், 334 அரசியல் கட்சிகளை தலைமை தேர்தல் ஆணையம் தற்போது நீக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் 22 அரசியல் கட்சிகளின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நீக்கம் செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் இனிமேல் நாட்டில் நடைபெறும் தேர்தல்களின் போது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் கட்சி சார்பாக எந்த வேட்பாளரையும் நிறுத்த முடியாது. அதேநேரத்தில், நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News