தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆர்எஸ்எஸ் நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கை போல் கர்நாடகாவிலும் எடுக்க முதல்வர் சித்தராமையா உத்தரவு!

 

Advertisement

கர்நாடகா: தமிழ்நாட்டில் அரசு நிலம், கட்டடங்களில் RSS நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது போல், கர்நாடகாவிலும் தடை விதிப்பது குறித்து மதிப்பாய்வு செய்ய தலைமைச் செயலருக்கு மாநில முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு அளித்துள்ளார். தமிழ்நாட்டை முன்மாதிரியாக எடுத்து, அரசு கட்டடங்களில் RSS நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சித்தராமையாவுக்கு பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார்.

அரசு பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளைத் தடை செய்தல். வெறுப்பு மற்றும் தீவிரவாத சித்தாந்தத்திலிருந்து குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பாதுகாக்க உறுதியான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சாதி, மதத்தால் பிளவுபட்ட மக்களிடமிருந்து நாம் விலகி, அனைவரையும் நேசிக்கும் குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது குறுகிய மனப்பான்மையைக் கைவிட்டு, நாம் அனைவரும் பரந்த இதயம் கொண்ட மனிதர்கள் என்பதை உணர்ந்தால், ஒரு அழகான சமூகம் உருவாகும். அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது என்று முதல்வர் சித்தராமையா கூறினார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளால் சமுதாயத்தில் பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் பிரியாங்க் கார்கே உள்ளிட்டோரின் கடிதம் கிடைத்த நிலையில் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதில்லை. ஆனால், தற்போது சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தும் வகையிலும் அவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. எனவே, அதன் செயல்பாடுகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதே நேரம் , ஆர்எஸ்எஸ் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதில் தமிழ்நாட்டில் எவ்விதம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேறு மாநிலங்களில் இது தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளேன். அந்த தகவல் கிடைத்த பிறகு மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படும்’ என்றார்.

 

 

 

Advertisement

Related News