ஆர்எஸ்எஸ்சை புகழ்ந்து பேசியதன் மூலம் தியாகிகளின் உணர்வை மோடி அவமதித்து விட்டார்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் எம்.ஏ.பேபி தன் எக்ஸ் தள பதிவில், “ பிரதமர் மோடி தன் சுதந்திர தின உரையில் சந்தேகத்துக்குரிய பல வரலாற்று பதிவுகளை கொண்ட ஆர்எஸ்எஸ்சை புகழ்ந்து பேசினார். இது மிகவும் வருந்தத்தக்கது. பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ்சை புகழ்ந்து பேசியதன் மூலம் தியாகிகளின் நினைவை அவமதித்து விட்டார்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement