தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைனில் ரேட்டிங் போட்டால் பணம் என சென்னை ஐடி ஊழியரிடம் ரூ21 லட்சம் நூதன மோசடி

Advertisement

சென்னை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது வாலிபர். சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது செல்போனிற்கு டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் எண்களில் இருந்து ஒரு லிங்க் வந்துள்ளது. அதனை அவர் தொட ர்பு கொண்டபோது அதில் பேசிய நபர்கள், இந்தியா முழுவதும் சுற்றுலாத்தலங்களில் உள்ள ஹோட்டல்கள் குறித்து விளம்பரங்களை பார்த்து, அவை குறித்து ஆன்லைனில் ரேட்டிங் கொடுங்கள், உங்களது ரேட்டிங்கிற்கு ஏற்ப பணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதன்படி, அவர் கடந்த இரு மாதங்களாக தினமும் ரேட்டிங் செய்து தொகை பெற்றுள்ளார்.

அவரை மீண்டும் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ஆன்லைன் மூலம் தங்களிடம் முதலீடு செய்தால் பலமடங்கு லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய அந்த வாலிபர் அந்த நபர்கள் கொடுத்த 8 வங்கி கணக்குகளுக்கு அடுத்தடுத்து ₹21 லட்சம் வரையில் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவர்கள் தெரிவித்ததுபோல் பல நாட்களாகியும் லாப பணம் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதுகுறித்து புகாரின்பேரில் நெல்லை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement