தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உச்ச நீதிமன்ற கொலிஜியம் விவரங்களை கேட்ட மனுதாரருக்கு ரூ.25000 அபராதம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

Advertisement

புதுடெல்லி: கொலிஜியம் அமைப்பின் முடிவுகள் குறித்தும், அதன் பின்னணி குறித்த விவரங்களையும் விரிவாக வௌியிட கோரி வழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

உச்ச நீதிமன்ற கொலிஜியம் அமைப்பானது, உச்ச நீதிமன்றம் மற்றும் நாடு முழுவதுமுள்ள உயர் நீதிமன்றங்களின்தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகளை பரிந்துரைக்கும் அமைப்பாகும். இந்த கொலிஜியம் அமைப்பின் முடிவுகள் குறித்தும், அதன் பின்னணி குறித்த விவரங்களையும் விரிவாக வெளியிட வேண்டும் எனக் கோரி ராகேஷ் குமார் குப்தா என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த வழக்கு விளம்பர நோக்கத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாக புரிந்துக் கொள்ள முடிகின்றது. ஏற்கனவே இதுபோன்ற நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வழக்குகளை தொடர்ந்ததற்காக மனுதாரருக்கு எதிராக சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தற்போது தொடர்ந்துள்ள இந்த மனுவை ரூ.25,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்வதாகவும், இந்த அபராத தொகையை காயமடைந்த பாதுகாப்பு படையினருக்கான நல திட்டத்திற்கான வங்கி கணக்கில் நான்கு வார காலத்துக்குள் மனுதாரர் செலுத்த வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

 

Advertisement

Related News