தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அனுமதியின்றி போராட்டம் நடத்த சென்ற ஆர்.பி. உதயகுமார் கைது

மதுரை: மதுரை அருகே, அனுமதியின்றி போராட்டம் நடத்த சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே, வி.சத்திரப்பட்டியில் காவல்நிலையம் உள்ளது. இந்த காவல்நிலையம் ஊரில் இருந்து அரை கி.மீ தொலைவில் உள்ளது. இதனைச் சுற்றி சீமைக்கருவேல மரங்கள் உள்ளன. நேற்று இரவு ஏட்டு மட்டும் காவல்நிலையத்தில் பணியில் இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த 8 பேர் முகமூடி கும்பல் கம்பி, கம்புகளால் காவல்நிலையத்தில் இருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். பின்னர் சீமைக்கருவேல காட்டுப்பகுதி வழியாக தப்பிச் சென்றனர். தகவலறிந்து வந்த மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்தன், பேரையூர் டிஎஸ்பி துர்காதேவி, உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகர் உள்ளிட்ட போலீசார் காவல்நிலையத்தில் ஆய்வு செய்தனர்.

போலீசார் விசாரணையில் வி.வெங்கடாசலபுரம் காலனியில் உள்ள ஒரு கும்பல் வந்து பொருட்களை அடித்து நொறுக்கியது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் போராட்டம் நடத்தப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வி.சத்திரப்பட்டிக்கு வந்த ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை என்.முத்துலிங்காபுரம் என்ற இடத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

 

Related News