சென்ட்ரல் ரயில்வே ஆயுத கிடங்கில் துப்பாக்கி தோட்டா வெடித்து ஆர்பிஎப் காவலர் படுகாயம்
Advertisement
அவரை மீட்டு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர். ஒத்திவாக்கத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற இருந்த நிலையில், அதற்காக துப்பாக்கிகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என சோதனை செய்தபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்த தோட்டா வெடித்தது தெரியவந்தது. இதுகுறித்து, சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து பூக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement