தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராயபுரம் மண்டலத்தில் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்

சென்னை: துறைமுகம் சட்டமன்ற தொகுதி, ராயபுரம் மண்டலத்தில் நடந்து வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். துறைமுகம் சட்டமன்ற தொகுதி, ராயபுரம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ராயபுரம் மண்டல அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது.

Advertisement

அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு தலைமை வகித்தார்.  பின்னர் துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பணி ஒப்பந்தம் கோரப்பட்டு தொடக்க நிலையில் உள்ள பணிகளின் தற்போதைய நிலை குறித்து விரிவாக தொடர்புடைய துறை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தி அனைத்துப் பணிகளும் வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ். மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசின் சேவைகள் குறித்தும் தொடர்புடைய துறை அலுவலர்களிடம் விரிவாக ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தக் கூடிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டார்.

Advertisement