தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ராயபுரம் போஜராஜன் நகரில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை இராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் ரூ. 30.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரயில்வே சுரங்கப்பாதையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். போஜராஜன் நகர் சுரங்கப்பாதை பணியை துவங்கி 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் 40 ஆண்டுகால கோரிக்கை வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வட சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் தெருவிற்கும்- மின்ட் பகுதிக்கும் இடையே கொருக்கு பேட்டை ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து செல்ல கூடிய விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் செல்ல கூடிய நிலையில் ரயில்வே கேட் மூடக்கூடிய நிலை ஏற்படும். இதன் காரணமாக இரு பகுதிக்கும் செல்ல கூடிய பொதுமக்கள் வெகு நேரம் நின்று செல்ல கூடிய நிலை உள்ளது.

அவசர மருத்துவ தேவைக்காக செல்ல கூடியவர்களும் செல்ல முடியாத நிலையில் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு 2022ம் ஆண்டு அக்டோபர் புதிய பணிகள் துவங்கப்பட்டு தற்போது ரயில்வேயுடன் இணைந்து பாலப்பணிகள் முடிக்கப்பட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதனை தொடங்கி வைத்தார்.

 

Related News