தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது

திண்டுக்கல்: மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மீது சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சிலைமான் காவல் நிலையத்தில் கடந்த 2012ல் கொலை முயற்சி மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வரிச்சியூர் செல்வம் தனது கூட்டாளிகளான கேரளாவை சேர்ந்த சினோஜ், அஜிஸ், வர்கீஸ் ஆகியோருடன் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள லாட்ஜில் மறைந்திருந்தார்.

Advertisement

இதையறிந்த சிலைமான் போலீசார் கடந்த 12.03.2012ல் அவர்களை கைது செய்வதற்காக திண்டுக்கல் வந்தனர். அப்போது, வரிச்சியூர் செல்வம் தரப்புக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் கேரளாவை சேர்ந்த சினோஜ் உயிரிழந்தார். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் ஜேஎம் 2ல் நடைபெற்று வருகிறது. இதில் வரிச்சியூர் செல்வம் தொடர்ந்து ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார்.

இதையடுத்து நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. எனவே திண்டுக்கல் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் வத்தலக்குண்டு பகுதியில் வரிச்சியூர் செல்வம் பதுங்கியிருப்பதாக நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்ற திண்டுக்கல் வடக்கு போலீசார் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்தனர். அவரை மாவட்ட நீதிமன்றம் ஜே.எம் 2ல் ஆஜர்படுத்தினர். நீதிபதி அக்.3 வரை வரிச்சியூர் செல்வத்தை சிறையிலடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, வரிச்சியூர் செல்வம் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement