தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

யார் பெரிய ரவுடி என்ற போட்டியில் ரவுடி அடித்து கொலை‌: கூட்டாளிகள் 3 பேர் கைது

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் யார் பெரிய ரவுடி என்பதில் ஏற்பட்ட தகராறில், ரவுடியை அடித்து கொன்ற கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவை சேர்ந்தவர் மனோஜ் குமார் (எ) மாயாண்டி (20). இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர், நேற்று முன்தினம் இரவு புதுவண்ணாரப்பேட்டை வீரராகவன் தெருவில் தலையில் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்தார்.

Advertisement

அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜ்குமார் உயிரிழந்தார். தகவலறிந்த புது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், மனோஜ் குமார், தனது கூட்டாளிகளான புது வண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவை சேர்ந்த சஞ்சை (எ) குல்லா (22), தனபால் நகரை சேர்ந்த தேவபிரசாத் (எ) தேவா (22). ஏ.இ.கோயில் தெருவை சேர்ந்த பிரகாஷ் (எ) அய்யாவு ஆகியோருடன் மது அருந்தியதும், அப்போது யார் பெரிய ரவுடி என்பதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், இவரது கூட்டாளிகள் சேர்ந்து பீர் பாட்டிலால் மனோஜ்குமார் தலையில் அடித்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News