தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: சென்னையில் அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் உத்தரவு

சென்னை: சென்னை: சென்னையில் காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ரவுடிகள் சிலரால் படுகொலை செய்யபட்டார். இதனை அடுத்து சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு புதிய சென்னை காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பதவியேற்றதுமே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கமிஷனர் அருண் மேற்கொண்டு வருகிறார்.
Advertisement

இந்நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என காவல் ஆய்வாளர்களுக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ரவுடிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கண்காணிக்க வேண்டும். சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீட்டிற்கே சென்று எச்சரிக்கை விடுக்க வேண்டும். ஜாமினில் இருக்கும் ரவுடிகள் நிபந்தனைகளை மீறினால் ஜாமினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Related News