தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கே.கே.நகரில் பிரியாணி கடை உரிமையாளரை கத்திமுனையில் தாக்கி பணம் பறித்த 3 ரவுடிகள் கைது

சென்னை: கே.கே.நகரில் பிரியாணி கடை உரிமையாளரை கத்திமுனையில் தாக்கி பணம் பறித்த 3 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்.ஜி.ஆர்.நகர் புகழேந்தி தெருவை சேர்ந்தவர் பிரபு(35). இவர் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே பிரியாணி கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் கடைக்கு தேவையான காய்கறிகளை வாங்க ேநற்று தனது பைக்கில் கோயம்பேடு நோக்கி ெசன்றார். அப்போது கே.கே.நகர் வன்னியர் தெரு அருகே செல்லும் போது, பைக்கில் வந்த 3 பேர், திடீரென பிரபுவை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர். அதற்கு அவர் தர மறுத்ததால் கத்தியை காட்டி அவரை சரமாரியாக தாக்கி ரூ.4,300 பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

Advertisement

இதுகுறித்து பிரியாணி கடை உரிமையாளர் பிரபு கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, பிரபல ரவுடிகளான கே.கே.நகர் 63வது தெருவை சேர்ந்த அபிஷேக்(25), போரூர் மதனந்தபுரம் பகுதியை சேர்ந்த நரேன்(25), தேனாம்பேட்டை திரு.வி.க குடியிருப்பை சேர்ந்த பிரகாஷ்(43) ஆகியோர் என தெரியவந்தது. அபிஷேக் மீது 10 குற்ற வழக்குகள், நரேன் மீது 10 வழக்குகள், பிரகாஷ் மீது 14 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து, போலீசார் 3 ரவுடிகளையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் ஒரு கத்தி, ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Related News