தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரோஜா பூங்காவில் உதிராமல் பூத்துக்குலுங்கும் மலர்கள்

Advertisement

ஊட்டி : ஊட்டி ரோஜா பூங்காவில் முதல் இரு பாத்திகளில் மலர்கள் உதிராமல் உள்ளதால், இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கும். இது, இரு மாதங்களுக்கு மேல் நீடிக்கும்.

இந்த மழையின்போது, சூறாவளி காற்று அதிகமாக காணப்படும். இச்சமயங்களில் ரோஜா பூங்கா செடிகளில் உள்ள ரோஜா மலர்கள் அனைத்தும் உதிர்ந்துவிடும். இதனால், ஜூலை மாதங்களில் ரோஜா பூங்காவில் உள்ள செடிகளில் அதிகளவு மலர்களை காண முடியாது.

இச்சமயங்களில் மலர் செடிகள் மற்றும் புல் மைதானங்களை பராமரிக்கும் பணிகளில் தோட்டக்கலைத் துறையினர் ஈடுபடுவார்கள். இம்முறை தென்மேற்கு பருவமழை மே மாதம் துவங்கிய போதிலும், தொடரவில்லை. துவக்கத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே கொட்டியது.

அதன்பின், பெரிதாக மழை பெய்யவில்லை. நாள்தோறும் சாரல் மழை மட்டுமே காணப்படுகிறது. மேலும், காற்றின் வேகமும் சற்று குறைந்தே உள்ளது. துவக்கத்தில் ரோஜா பூங்காவில் உள்ள மலர் செடிகளில் இருந்த மலர்கள் அழுகி உதிர்ந்த போதிலும், அதன் பின் மலர்கள் உதிராமல் உள்ளது.

தற்போது பூங்காவில் உள்ள முதல் இரு பாத்திகளில் உள்ள செடிகளில் மலர்கள் பூத்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்ட போதிலும், இங்கு பூத்து குலுங்கும் ரோஜா மலர்களை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

அதேபோல், புல் மைதானங்கள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், அவைகளும் பச்சை கம்பளம் விரித்தார்போல், பச்சைபசேல் என காட்சி அளிக்கிறது.

Advertisement

Related News