தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரோகித் ரசிகரை கொன்ற கோஹ்லி ரசிகருக்கு ஆயுள்: அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பு

அரியலூர்: கிரிக்கெட் வீரர் ேராகித் சர்மா ரசிகரை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொன்ற வழக்கில் விராட் கோஹ்லி ரசிகருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே க.பொய்யூர் வடக்குத்தெருவை சேர்ந்த புகழேந்தி மகன் விக்னேஷ் (25). கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா ரசிகர். அதே தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (24). விராட் கோஹ்லி ரசிகர். ெநருங்கிய நண்பர்களான இருவருக்கும் இடையே ஐபிஎல் போட்டியில் தான் ஆதரவளிக்கும் அணி தான் பெரிய அணி என கூறி அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் விக்னேஷ், தர்மராஜை பார்த்து ‘உன்னை போல உன் அணியும் வீக்காக உள்ளது’ என்றும், விராட் கோஹ்லி குறித்தும் அவதூறாக பேசியுள்ளார்.

Advertisement

இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த தர்மராஜ், கடந்த 2022ம் ஆண்டு விக்னேஷை போனில் தொடர்பு கொண்டு மது அருந்தலாம் என்று கூறி பாருக்கு வரவழைத்துள்ளார். இருவரும் மது அருந்தினர். போதை ஏறியதும் தர்மராஜ், மறைத்து வைத்திருந்த கிரிக்கெட் பேட்டால் விக்னேஷின் தலையில் சரமாரி தாக்கினார். இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழூர் போலீசார் வழக்கு பதிந்து தர்மராஜை கைது செய்தனர். இந்த வழக்கை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலாண்டினா விசாரித்து, விராட் கோஹ்லி ரசிகர் தர்மராஜிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement