தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தாண்டு டிசம்பர் மாத இறுதிக்குள், ஆளில்லா ராக்கெட்டை அனுப்ப திட்டம் :இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு

கோவை: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் 85 சதவீத சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இஸ்ரோ தலைவர் நாராயணன் விமானம் மூலம் இன்று காலை கோவைக்கு வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்வெளிக்கு ஆளில்லாத ராக்கெட் அனுப்ப திட்டமிட்டுள்ளது‌‌. அதில் வயோமித்ரா என்ற இயந்திர மனிதனை அனுப்ப உள்ளோம். டிசம்பர் மாதம் இறுதியில் அது நடைபெறும். இது முடிந்தவுடன் 2 ஆளில்லா ராக்கெட்களை அனுப்ப உள்ளோம்.

Advertisement

2027ம் ஆண்டு மார்ச் மாதம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். ககன்யான் திட்டத்தில் 85 சதவீத சோதனைகள் நிறைவு பெற்றுள்ளது. மனிதர்களை அனுப்புவதற்கு பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். ராக்கெட்டில் விபத்து நடந்தால் மனிதர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதையும் ஆய்வு செய்து வருகிறோம். இதில் இஸ்ரோ மட்டுமல்லாமல் ஏரோ, நேவி உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர். விண்வெளித்துறையில் உலகத்தில் 9 இடங்களில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம்.

நிலாவில் இருக்கக்கூடிய கேமராவில் சிறந்த கேமரா நமது நாட்டுடையது. செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவதிலும் வெற்றி அடைந்த முதல் நாடு இந்தியாதான். ராக்கெட் இன்ஜினிலும் சாதனைகளை படைத்துள்ளோம். ஏஐ தொழில்நுட்பம் விண்வெளித் துறையிலும் வந்துவிட்டது. வயோமித்ரா என்பதும் ஏஐ டெக்னாலஜிதான். சந்திராயன்-4 நிலாவில் மாதிரிகளை எடுத்து வருவதிலும் ஏஐ ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்த போகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News