தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோயம்பேடு மார்க்கெட்டில் வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியம்: போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா?

 

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இரவு நேரங்களில் வெளியாட்கள் மதுஅருந்திவிட்டு அட்டகாசம் செய்வதுடன் சண்டையிட்டு கொள்கின்றனர். அத்துடன் மார்க்கெட்டில் தனியாக நடந்துச்செல்லும் வியாபாரிகள், கூலி தொழிலாளர்களை மறித்து கத்தியை காட்டி செல்போன், பணம் ஆகியவற்றை பறித்து சென்றுவிடுகின்றனர். இதன்காரணமாக வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் பீதியடைந்து உள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது; கோயம்பேடு மார்க்கெட்டில் செல்போன், செயின் பறிப்பு, பைக் திருட்டு அதிகரித்துவந்த நிலையில், வழிப்பறி அதிகரித்து வருகிறது.

எனவே, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்கின்றனர். இரவு நேரங்களில் போலீசார் ரோந்துவரவேண்டும். ஆசியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டாக விளங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் போலீசார் பாதுகாப்பு இல்லாததால் குற்றச் சம்பவங்களில் கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இனிமேலாவது காவல் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இரவு நேரங்களில் மார்க்கெட்டில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறினர்.