தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொஞ்சம் உடலை அசத்திட்டு போவோம்... கொள்ளை அடிக்க வந்த வீட்டில் குறட்டை விட்ட கொள்ளையன்: தட்டி எழுப்பிய வீட்டு உரிமையாளர்

கோவை: கொள்ளையடிக்க வந்த வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையன் சிக்கினான். கோவை காட்டூர் ராம்நகரை சேர்ந்தவர் ராஜன் (53). இவர், பாதாம், பிஸ்தா விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி கதிர் நாயக்கன்பாளையத்தில் இருந்து வருகிறார். அவரை பார்க்க ராஜன் வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டார். இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு திரும்பினார். அப்போது, கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்குள் இருட்டாக இருந்தது. உடனே ராஜன் தனது நண்பர் தாமோதரனையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார். அங்கு அறையில் 55 வயது மதிக்கத்தக்க நபர் தூங்கிக் கொண்டிருந்தார்.
Advertisement

தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி விசாரித்த போது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காட்டூர் போலீசுக்கு ராஜன் தகவல் தெரிவித்தார். போலீசார் சென்று விசாரித்தனர். இதில், அவரது பெயர் பாலசுப்பிரமணியன் என்றும், கருமத்தம்பட்டி அருகே பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. ராஜன் வீடு பூட்டப்பட்டு இருந்ததால் கொள்ளையடிக்க வந்துள்ளார். சிறிது நேரம் தூங்கி விட்டு பொருட்களை கொள்ளை அடித்து செல்லலாம் என நினைத்த அவர் போதையில் அசந்து தூங்கி விட்டதால் மாட்டி கொண்டார். போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement