தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சாலைப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் துணை முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளின் கீழ்...

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளின் கீழ் சீரமைக்கப்பட்டு வரும் சாலைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். சீரமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாக முடிக்க தகுந்த நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

நெடுஞ்சாலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் "நம்ம சாலை செயலி" மூலமாக பொதுமக்கள் அளித்த புகார்களின் எண்ணிக்கை மற்றும் தீர்வு காணப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். தற்போது "நம்ம சாலை செயலி" மூலமாக பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் குறித்து அளிக்கும் புகார்களுக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கும் வசதி உள்ளதால், அனைத்து துறைகளின் சாலை விவரங்களை "நம்ம சாலை செயலியின்" கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். "நம்ம #1160060 செயலியின்" கீழ் அனைத்து துறைகளின் சாலை விவரங்களையும் கொண்டு வரும் பணிகளை ஒரு மாத காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், , கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் உள்பட துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்