தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலையில் திரியும் மாடுகளுக்கு 14 புதிய பராமரிப்பு மையங்கள்: மாநகராட்சி தகவல்

மாதவரம்: சென்னை முழுவதும் சுமார் 22,000 மாடுகள் சாலைகளில் திரிந்து கொண்டிருப்பதாக மாநகராட்சி கணக்கு தெரிவிக்கிறது. இந்த மாடுகள் வாகன விபத்துகளுக்கு காரணமாவதுடன், போக்குவரத்துக்கும் பெரிய தொந்தரவாக உள்ளன. அவற்றை மீட்டு பராமரிப்பு மையங்களில் விட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க உள்ளது. சென்னையில் தற்போது 3 மாடு பராமரிப்பு மையங்கள் செயல்படுகின்றன. ராயபுரம் மண்டலம் - 350 மாடுகள் (தினமும் ஒரு மாட்டுக்கு ரூ.10 கட்டணம்). திருவொற்றியூர் மண்டலம் - 40 மாடுகள். மாதவரம் மண்டலம் - 100 மாடுகள்.

Advertisement

மாநகராட்சி விரைவில் 14 புதிய மாடு பராமரிப்பு மையங்களை திறக்க உள்ளது. இவை சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படும். இதன் மூலம் சாலைகளில் திரியும் மாடுகளை எளிதாகப் பிடித்து, பாதுகாப்பாக வைத்து கவனிக்க முடியும். இந்த மையங்களில் மாடுகளுக்கு தீவனம், தண்ணீர், மருத்துவ சிகிச்சை, நோய் தடுப்பூசி போன்ற வசதிகள் கிடைக்கும். இவை அனைத்தும் இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணத்திலோ வழங்கப்படும். மாடுகளின் உரிமையாளர்கள் சிறிய கட்டணம் செலுத்தி தங்கள் மாடுகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் .

விரைவில் 14 புதிய மையங்கள் திறக்கப்பட்டால், சென்னை சாலைகளில் திரியும் மாடுகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும். இதனால் விபத்துகள் குறைவதுடன், போக்குவரத்தும் சுமூகமாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாடுகளையும் நாய்களையும் பாதுகாப்பாக வைத்து, சாலைகளை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைக்க மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Advertisement

Related News