தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நத்தம் பகுதியில் மணல் லாரிகளால் சாலைகள் சேதம்

 

நத்தம்: நத்தம் பகுதியில் மணல் லாரிகளால் சாலைகள் சேதமடைகின்றன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கரடிக்குட்டு, பாதசிறுகுடி, ஆவிச்சிபட்டி, கோட்டையூர், சாத்தம்பாடி, குடகிப்பட்டி, பிள்ளையார்நத்தம் பகுதிகளில் கிரசர்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஜல்லி கற்கள், தூசி, எம்.சாண்ட் போன்றவை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் எம்.சாண்ட் மணல், ஜல்லிகளை லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்து வருகின்றனர். எம்.சாண்ட் ஏற்றிச் செல்லும்போது, தார்ப்பாயால் மூடி தூசி பறக்காமல் எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. தற்போது இதற்கு பதிலாக குழாய் மூலம் தண்ணீர் தெளித்து நனைத்து எடுத்துச் செல்கின்றனர்.

இதனால் ஈரமான மணலில் இருந்து சாலையில் நீர் வடிகிறது. தொடர்ந்து இவ்வாறு எடுத்து செல்லப்படுவதால் இப்பகுதிகளில் சாலைகள் சேதமடைவதாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் புகார் கூறுகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: எம்.சாண்ட் மணல், கிரசர் தூசி ஏற்றிச் செல்லும் டிராக்டர், கனரக வாகனங்களால் சாலை சேதம் அடைகிறது. வாகனங்களில் தண்ணீர் வடிவது இதற்கு முக்கிய காரணம். எனவே, இதை தவிர்த்து, முறையாக தார்ப்பாயால் முழுமையாக மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என்றனர்.

Related News