தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணியால் சேறும் சகதியுமாக மாறிய சாலை: பொதுமக்கள் கடும் தவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் பெருமாள்பட்டு பகுதியில் இருந்து 26.வேப்பம்பட்டு பகுதிக்கு சுமார் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரயில்வே தண்டவாளத்தை கடந்துதான் செல்லவேண்டும். இதனால் அவதிப்பட்டு வந்த மக்கள், ‘’26 வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும்’ என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து தற்போது மேம்பால பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது. இதற்காக ராட்சத இயந்திரங்களைக்கொண்டு பாலம் அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டு அதில் இருந்து எடுக்கப்பட்ட மணலை அதே இடத்தில் கொட்டிவைத்துள்ளனர்.

Advertisement

இதன்காரணமாக வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்கின்றவர்கள் என பல தரப்பினரும் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இந்த வழியாக சென்றுவந்த அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், சில நாட்களாக பெய்துவரும் கன மழையின் காரணமாக சாலை முழுவதும் மணல் பரவி சேறும் சகதியுமாக மாறிவிட்டதால் வாகனங்கள் செல்ல சிரமப்படுகிறது. நடந்துசெல்கின்றவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சேற்றை அகற்றி பொதுமக்கள் சிரமமின்றி சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement