தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாக்கினாம்பட்டி கிராமத்தில் கிடப்பில் போடப்பட்ட ரோடு சீரமைக்கும் பணி : பொதுமக்கள் வேதனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி கிராமத்தில் பழுதான ரோடுகளை சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளர். பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி கிராமத்தில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில், வால்பாறை ரோட்டிலிருந்து மாக்கினாம்பட்டி வழியாக, சந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிக்கு செல்லும் ரோடு மற்றும் மாக்கினாம்பட்டியிலிருந்து கஞ்சம்பட்டி, தொழில்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ரோடானது பல ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. அதன்பின் சீரமைப்பு பணி நடக்காததால் நாள்போக்கில் பெரிய அளவில் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டது.
Advertisement

சில நேரத்தில் பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கையின் அடிப்படையில் அந்த ரோட்டில் அவ்வப்போது பேட்ஜ் ஒர்க் என்ற பெயரில் மண்ணை போட்டு நிரப்பி விடுகின்றனர். ஆனால், மழைக்காலங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டு பெரிய அளவில் குண்டும் குழியுமாக உண்டாகிறது.

இந்த பகுதியில் பகல் மற்றும் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த ரோட்டை முழுமையாக சீர்படுத்தாமல் இருப்பதால், அடிக்கடி இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் நடந்துள்ளது. மிகவும் பழுதான ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை தொடர்ந்து கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், மாக்கினாம்பட்டி கிராமத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பழுது ஏற்பட்டு குண்டும், குழியுமாக உள்ள ரோட்டை முறையாக சீரமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் இல்லாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் இந்த கிராமத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பழுதான ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement