தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலை தடுப்பில் பைக் மோதி சிறுவன் உள்பட மூவர் உயிரிழப்பு

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் திலீப் (26). இவர், தனது உறவினர் மகன் மதன் (13) என்பவனுடன் பைக்கில் காசிமேடு அருகே சென்றபோது, திடீரென நிலைதடுமாறி பைக்கில் இருந்து சிறுவன் விழுந்துள்ளான். அப்போது, அவ்வழியாக வந்த மாநகர பஸ் ஏறி இறங்கியதில் சிறுவன் மதன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

Advertisement

சாலை தடுப்பு சுவரில் பைக் மோதியதில் தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே திலீபனும் பலியானார். இதுகுறித்து தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் முனிரத்தினம் (46) என்பவரை கைது செய்தனர். மற்றொரு சம்பவம்: மீனம்பாக்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த கோவர்தன் (19), தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.

இவர், நேற்று முன்தினம் பரங்கிமலை பட்ரோடு வளைவு அருகே பைக்கில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சென்டர் மீடியன் மீது மோதி கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த கோவர்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News