தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வந்தவாசி அருகே அமையப்பட்டு கிராமத்தில் சாலையில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

*கால்வாய் அமைக்க கோரிக்கை

Advertisement

வந்தவாசி : வந்தவாசி அருகே அமையப்பட்டு கிராமத்தில் சாலையில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.வந்தவாசி நகரின் முக்கிய சாலையான ஆரணி நெடுஞ்சாலையில் நகரத்தை ஒட்டியவாறு உள்ள அமையப்பட்டு கிராமத்தில் கால்வாய் வசதி இல்லாததால் சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது.

நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இந்த சாலையில் ஏற்கனவே ஊராட்சி நிர்வாகம் சார்பில் கால்வாய் அமைக்கப்பட்டதால், நெடுஞ்சாலைத்துறை சாலை மட்டும் அமைத்து கால்வாய் அமைக்காமல் விட்டனர்.

ஊராட்சி நிர்வாகம் சிறிய அளவிலான கால்வாய் அமைத்ததால் முழு கொள்ளளவு தண்ணீரும் அதில் செல்ல முடியாமல் சாலையில் செல்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.

இங்கு பயிலும் ஏராளமான மாணவர்கள் சாலையில் செல்லும் கழிவுநீரை கடந்து தான் பள்ளிக்கு செல்கின்றனர். இதனால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, அமையப்பட்டு கிராமத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் அமைந்துள்ள முக்கிய சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement