தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாழைப்பந்தல் கூட்ரோட்டில் இருந்து கொருக்காத்தூர் வரை இருவழிச்சாலையாக மாற்றம்

*விரிவாக்கம் செய்ய ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Advertisement

பெரணமல்லூர் : பெரணமல்லூர் அடுத்த வாழைப்பந்தல் கூட்ரோடு பகுதியில் இருந்து கொருக்காத்தூர் வழியாக பச்சையம்மன் கோயில், கலவை மற்றும் ஆற்காடு செல்லும் தார் சாலை அமைந்துள்ளது. இதில் கூட்ரோடு பகுதியில் இருந்து கொருக்காத்தூர் பகுதி வரை அமைந்துள்ள சுமார் 4கி.மீ தார் சாலை ஒரு வழி சாலையாக அமைந்துள்ளதால் இந்த வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இதையடுத்து நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை உட் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் இரு வழித்தடமாக மாற்ற சுமார் ரூ.4.53 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சாலை விரிவாக்க பணிக்கான ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த சாலையில் குறிப்பிட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு ஆக்கிரமிப்பு பகுதிகள் உள்ளதை அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள உரிமையாளர்களுக்கு உரிய நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந் நிலையில் நேற்று முதல் ஆக்கிரமிப்பு பகுதிகளை ஆரணி நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் வரதராஜன் ஆய்வு செய்தார். மேலும் அவரது மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

Advertisement