தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்னம் அருகே கோவில்பாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி சாலை மறியல்

*போக்குவரத்து பாதிப்பு

Advertisement

குன்னம் : குன்னம் அருகே கோவில்பாளையத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா பகுதியில் கோவில்பாளையம் உட்பட சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் நூற்றுக்கணக்கான ஹெக்டர் நிலப்பரப்பில் குருவை பருவ நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியரிடம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என மனு அளித்திருந்தனர்.

செப்டம்பர் மாதம் 1-ம் தேதி திறப்பதாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய மேலாளர் தெரிவித்ததாக கூறுகின்றனர் ஆனால் இதுவரை திறக்கவில்லை இந்நிலையில் இந்த பகுதியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மழை பெய்து வரும் சூழ்நிலையில் நெல்மணிகள் நனைந்து தற்போது முளைக்க தொடங்கி உள்ளன இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல்மணிகள் ஏற்றிய டிராக்டர் டிப்பரை அரியலூர் திட்டக்குடி சாலையில் குறுக்கே நிறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த வந்த குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் விவசாயிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தி மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் பேசி வருகிற புதன்கிழமை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததின் பெயரில் விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் அரியலூர் திட்டக்குடி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement