தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரிதன்யா தற்கொலை விவகாரம் சமூக நலத்துறை ஆபீசில் பெற்றோர் ஆஜர்: ஆடியோ தகவல்கள் சமர்ப்பிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் ரிதன்யா (27). வரதட்சணை கொடுமையால், திருமணமான 78 நாட்களில் கடந்த மே 28ம் தேதி காரில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார் மேலும், தற்கொலைக்கு கணவர் மற்றும் அவரது பெற்றோர்தான் காரணம் என்று கூறி, வாட்ஸ் அப்பில் அவர் பேசிய ஆடியோ வைரலானது. இதுதொடர்பாக சேவூர் போலீசார் வழக்குப்பதிந்து ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை கைது செய்தனர். தற்போது ஜாமீன் பெற்று உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் ரிதன்யாவின் தற்கொலை தொடர்பாக, அவரது தந்தை அண்ணாதுரை தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சமூக நலத்துறை விசாரணைக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அலுவலர் ரஞ்சிதாதேவி தலைமையிலான குழுவினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விசாரணையை தொடங்கினர். குழுவினரின் முன்பு ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, தாய் ஜெயசுதா மற்றும் சகோதரர் மிதுன், உறவினர்கள் ஆஜர் ஆகினர்.

அப்போது ரிதன்யாவின் தற்கொலை, வரதட்சணை கொடுமை தொடர்பாக உள்ள ஆதாரங்களுடன் நாளை ஆஜராகுமாறும் கேட்டுக்கொண்டனர். இது குறித்து சமூக நலத்துறை அதிகாரி ரஞ்சிதா தேவி கூறுகையில், தற்கொலை சம்பவம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் சம்மன் வழங்கப்பட்டது. ரிதன்யாவின் பெற்றோர் ஆஜராகி சில ஆடியோ உள்ளிட்ட தகவல்களை வழங்கி உள்ளனர். கவின்குமார் குடும்பத்தினர் ஆஜராகவில்லை. அதனால் அவர்கள் ஆஜராகும்படி மீண்டும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடமும் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.

Advertisement