தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரிஷிவந்தியம் அருகே சாலையில் தூங்கிய பெண் மீது மினி லாரி ஏறி பலி

ரிஷிவந்தியம் : கள்ளக்குறிச்சி மாவட்டம், பகண்டை கூட்டு சாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி தாமஸ் மனைவி பேபி மனோரஞ்சிதம் (62), இவர் அங்கன்வாடி மையத்தில் பொறுப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் எதிரில் உள்ள சிமெண்ட் சாலையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
Advertisement

அப்போது, பக்கத்து தெருவில் உள்ள மாரிமுத்து என்பவரது வீட்டிற்கு கதவு மற்றும் ஜன்னல் உள்ளிட்ட பொருட்களை மினி லாரி மூலம் தியாகதுருவத்தில் இருந்து பழைய சிறுவங்கூருக்கு எடுத்துக் கொண்டு வந்து இறக்கிவிட்டு மீண்டும் பல்லகச்சேரி செல்வதற்காக கிழக்கிலிருந்து மேற்காக செல்லும் சாலையில் சென்றபோது அங்கு சிமெண்ட் சாலையில் படுத்திருந்த பேபி மனோரஞ்சிதம் மீது வாகனத்தின் முன் சக்கரம் ஏறி இறங்கி உள்ளது.

இதையடுத்து, படுகாயம் அடைந்த மனோரஞ்சிதத்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பகண்டை கூட்டு சாலை போலீசார் வழக்கு பதிந்து அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர். வாகனத்தின் முகப்பு விளக்குகள் பழுதடைந்து இருந்ததால்தான் விபத்தில் பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Advertisement