தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலவரம் செய்ய யாரையாவது கடவுள் அனுப்புவாரா?: பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி

கொல்கத்தா: “நாட்டில் கலவரம் செய்ய, பொய்களை பரப்ப கடவுள் யாரையாவது அனுப்புவாரா?” என பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா கிண்டலாக கேள்வி எழுப்பி உள்ளார். பிரதமர் மோடி அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், “நான் மனிதப்பிறவியே அல்ல. கடவுளால் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டவன். இந்த பூமியில் சில செயல்களை கடவுள் என் மூலம் செய்ய விரும்புகிறார். அதற்காக கடவுள் கொடுத்த சக்தியால்தான் நான் சோர்வடையாமல் பணி செய்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Advertisement

இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “தேர்தல் தோல்வி பயத்தில் பாஜ தலைவர்கள் அர்த்தமற்ற பேச்சுகளை பேசி வருகின்றனர். நாட்டில் ஒருவர்(பிரதமர் மோடி) நான் மனிதப் பிறவியே கிடையாது. கடவுள் என்னை அனுப்பி வைத்தார் என்று சொல்கிறார். அப்படி சொல்பவருக்கு ஒரு கேள்வி. நாட்டில் கலவரங்களை செய்ய கடவுள் யாரையாவது அனுப்பி வைப்பாரா? விளம்பரங்கள் மூலம் பொய்களை பரப்ப யாரையும் அனுப்புவாரா?

சிஏஏ என்ற பெயரில் தன் மக்களை துன்புறுத்த கடவுள் தன் தூதரை அனுப்பி வைப்பாரா? 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை நிறுத்துவாரா? கிராமப்புற வீடுகள் கட்டுவதை தடுப்பாரா? மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்ற வாக்குறுதியை திரும்ப பெற கடவுள் சொன்னாரா? இதுபோன்ற செயல்களை கடவுள் செய்ய முடியாது” என்று அடுக்கடுக்கான கேள்வி எழுப்பி மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement