தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஜூன் 3-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய உத்தரவு

Advertisement

சென்னை: தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேறும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை தமிழ்நாடு அரசு ஏற்று வருகிறது. வருடம் தோறும் சுமார் ரூ.400 கோடி அளவில் இந்த மாணவர்களுக்கான கட்டணம் என்பது அரசு தரப்பில் இருந்து பள்ளிகளுக்கு செலுத்துப்படுகின்றன.

அதன்படி, 2024-2025-ம் கல்வியாண்டுக்கான ஆர்.டி.இ சட்டத்தின் கீழான மாணவர் சேர்க்கைக்கு 84,765 இடங்கள் என்பது கணக்கீடு செய்யப்பட்டது. அதில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. ஆர்.டி.இ-க்கான பிரத்தியேக இணையதளத்தில் பெற்றோர்கள் விண்ணப்பிக்களாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சுமார் 1,74,756 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

தொடர்ச்சியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் இந்த விண்ணப்பங்கள் எடுத்துகொள்ளப்பட்டு, தகுதியான விண்ணப்பங்கள், தகுதியற்ற விண்ணப்பங்கள், ஆவணங்கள் விடுபட்ட விண்ணபங்கள் என தனிதனியாக பிரிக்கப்பட்டு இவை அணைத்து பரிசீலைக்கு உட்படுத்தப்பட்டன. இறுதியாக 1,57,767 விண்ணப்பங்கள் உறுதி செய்யப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பது நடத்தப்பட்டது.

தொடர்ச்சியாக 28-ம் தேதி பள்ளிகளில் இடஒதுக்கீடு செய்யபட்டதை விட அதிகமாகவுள்ள விண்ணப்பங்கள் பெற்றோர் முன்னிலையில் குழுக்கள் முறைகள் மாணவர்கள் தேர்வு செய்யப்படவேண்டும் என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி மாணவர் சேர்க்கை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யபடுள்ள மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர் செல்போன் எண்களுக்கு ஓடிபி மூலமாக அந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. ஓடிபி எண் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் ஜூன் 3-ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு சென்று மாணவர் சேர்க்கையை உறுதி செய்யவேண்டும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisement