தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எதிர்மறை விமர்சனங்கள் வெறும் கூச்சலே... எனது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்தது என் உரிமை: நடிகை சோனாக்ஷி சின்ஹா பதிலடி

மும்பை: பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான சோனாக்ஷி சின்ஹா, கடந்த ஜூன் மாதம் நடிகர் ஜாகீர் இக்பாலைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் இவர்களது திருமணம் நடைபெற்றது. அப்போது சமூக வலைதளங்களில் இவர்களது திருமணத்திற்கு எதிராகக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. மதம் மாறுவது குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் நெட்டிசன்கள் பலரும் மோசமான கருத்துகளைப் பதிவிட்டு வந்ததால், அந்தச் சமயத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கமெண்ட் பகுதியையே சோனாக்ஷி முடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

Advertisement

இந்நிலையில், சமீபத்தில் தனியார் இணையதள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோனாக்ஷி சின்ஹா, தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். அப்போது அவர், ‘என் திருமணம் குறித்து எழுந்த விமர்சனங்கள் அனைத்தும் வெறும் கூச்சல் மட்டுமே; இதுபற்றி நான் கவலைப்படவில்லை’ என்று கூறினார்.  மேலும், ‘மாற்று மதத்தில் திருமணம் செய்துகொண்ட முதல் பெண் நானல்ல, கடைசிப் பெண்ணும் நானல்ல. நான் ஒன்றும் சிறுபிள்ளை இல்லை, என் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமை கொண்ட முதிர்ச்சியான பெண் நான்; முன்பின் தெரியாதவர்கள் கூறும் கருத்துகளுக்கெல்லாம் முக்கியத்துவம் தரத் தேவையில்லை. எது நடந்தாலும் இறுதியில் அன்பு மட்டுமே ஜெயிக்கும்’ என்று நெத்தியடியாகப் பதிலளித்துள்ளார்.

Advertisement

Related News