தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆய்வுக் கூட்டத்திற்கு வராத 5 அதிகாரிகளின் ஒரு நாள் சம்பளம் ‘கட்’: உ.பி அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

கோரக்பூர்: கோரக்பூரில் மக்கள் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்காத 5 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோயிலில் இரவு தங்கிய பிறகு, நேற்று காலை நடைபெற்ற ‘ஜனதா தர்ஷன்’ நிகழ்ச்சியில் மக்களுடன் கலந்துரையாடினார். சுமார் 200 பேரின் குறைகளைக் கேட்டறிந்த அவர், அவற்றின் மீது உடனடியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்காத 5 அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோட்ட ஆணையர் அனில் திங்க்ரா, கூட்டத்தில் கலந்து கொள்ளாத சி அண்ட் டிஎஸ் யூனிட் திட்ட மேலாளர்கள், நிர்வாகப் பொறியாளர் மற்றும் பிஆர்டி மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகிய ஐந்து அதிகாரிகளின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிட்டார். மேலும், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அவர் பரிந்துரை செய்துள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை, உத்தரபிரதேச அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News