தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் மாஜி டிஜிபி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: ஓய்வுபெற்ற தலைமை செயலர், மாஜி டிஜிபி வீடு உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தவெக கூட்ட அசம்பாவிதத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலகங்கள் என பல்வேறு இடங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரித்துள்ளது. பலத்த பாதுகாப்புடன் சோதனை மேற்கொள்ளும் பட்சத்தில், மிரட்டலானது வெறும் புரளி எனவும் தெரிய வருகிறது.

Advertisement

இருப்பினும் வெடிகுண்டு மிரட்டலை, அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அவ்வளவுதான்.. இதனால் மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், நேற்று தமிழக முன்னாள் டிஜிபி நட்ராஜ்,

ஆடிட்டர் குருமூர்த்தி, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, நீலாங்கரை அடுத்த அக்கரையில் உள்ள இஸ்கான் கோவில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழக முன்னாள் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் வீடு, எழுத்தாளர் சாரு நிவேதிதா வீடு, துக்ளக் அலுவலகம், பெரியார் சமாதி உள்ளிட்ட இடங்களில் குண்டு வெடிக்கும் என மர்ம நபர்கள் டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் 45 நிமிடங்கள் சல்லடை போட்டு தேடினர். ஆனால் அந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெறும் புரளி என தெரிய வந்தது. சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு உள்பட பலரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement