தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஓய்வுபெற்ற நீதிபதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்குவதாக கூறி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் கடிதம் அனுப்பி இருந்தார். தனக்கெதிராக புகார் அளித்த வாஞ்சிநாதனை அழைத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணை நடத்தினார். இதையடுத்து, வாஞ்சி நாதன் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் பல ஓய்வு பெற்ற நீதிபதிகள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், நீதிபதிகளுக்கு எதிரான கருத்துகளை ஓய்வுபெற்ற நீதிபதிகள் பொது வெளியில் வெளியிட தடை விதிக்கக்கோரி வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, நீதிபதிகள் குறித்த அறிக்கைகளை பொது வெளியில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெளியிட்டால் நீதித்துறை மீதான நம்பிக்கையை பொதுமக்கள் இழந்து விடுவார்கள் என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதித்துறை விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று எச்சரித்து, 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.