தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வு பெற்ற கைரேகை நிபுணர் வரதராஜன் கைது

சென்னை: கரூரில் விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலி தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து நீதிபதிக்கு எதிராக யூடியூப் சேனல் ஒன்றில் ஓய்வுபெற்ற கைரேகை நிபுணரும், ‘சன் டிடெக்டிவ் ஏஜென்சி’ நடத்தி வரும் நேதாஜி மக்கள் கட்சி தலைவரான வரதராஜன் ஒருமையிலும், நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அவதூறாக பேசியிருந்தார்.

Advertisement

இதுகுறித்து தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி நேற்று முன்தினம் வீடியோ ஆதாரங்களுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன்படி விசாரணை நடத்த உயர் காவல்துறை அதிகாரிகள் சென்னை தெற்கு மண்டல சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி விசாரணை நடத்திய போது, வரதராஜன் தனது யூடியூப் சேனலில் நீதித்துறையை கலங்கப்படுத்தும் வகையில் பேசியது உறுதியானது. அதைதொடர்ந்து, வதந்தியை பரப்பியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக நேற்று வரதராஜனை கைது செய்தனர். மேலும், அவர் பேசிய வீடியோவை நீக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கரூர் விவகாரத்தில் நீதிபதியை அவதூறாக பேசிய வழக்கில் நேற்று முன்தினம் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement