தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு அரசு பதவி; நீதித்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும்: தலைமை நீதிபதி கவாய் கருத்து

புதுடெல்லி: நீதித்துறையின் சட்டப்பூர்வமான தன்மை மற்றும் பொது நம்பிக்கையை பேணுதல் என்ற தலைப்பில் இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் நடந்த வட்டமேசை மாநாட்டில் இந்தியாவின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியதாவது:

ஒவ்வொரு அமைப்பும் எவ்வளவு வலுவானதாக இருந்தாலும் தொழில்முறை முறைகேடு தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளாகிறது. துரதிஷ்டவசமாக நீதித்துறையிலும் ஊழல் மற்றும் முறைகேடு சம்பவங்கள் நடந்துள்ளன. இத்தகைய நிகழ்வுகள் மக்களின் நம்பிக்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் ஒட்டுமொத்த நீதித்துறையின் நேர்மையின் மீதான நம்பிக்கையை சிதைக்கின்றன. இருப்பினும் இந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப தேவையான, உடனடி நடவடிக்கைகள் இந்தியாவில் எடுக்கப்பட்டு வருகிறது.

நீதித்துறை சந்திக்கும் இன்னொரு பிரச்னை, ஓய்வுக்குப் பிறகு அரசு பதவிகளை ஏற்பது. இந்தியாவில், நீதிபதிகள் ஓய்வு பெற்ற உடனேயே அரசு நிர்வாகத்தில் உயர் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டாலோ, தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜினாமா செய்தாலோ அது குறிப்பிடத்தக்க கவலைகளை ஏற்படுத்துகிறது. இது பொதுமக்கள் மத்தியில் நீதித்துறையின் நேர்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நானும் எனது சக நீதிபதிகள் பலரும் ஓய்வுக்குப் பிறகு எந்த அரசு பதவிகளையும் ஏற்கமாட்டோம் என்று பகிரங்கமாக உறுதியளித்துள்ளோம். இது நீதித்துறையின் நம்பகத்தன்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related News