தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காரைக்குடி மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

 

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சி மேயர் முத்துதுரைக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் மொத்தம் 36 உறுப்பினர்கள் உள்ளனர். மேயராக முத்துதுரை பதவி வகிக்கிறார். திமுக சார்பில் (மேயர் உட்பட) 23 பேர், அதிமுக சார்பில் 7 பேர், காங்கிரஸ் சார்பில் 3 பேர், சுயேட்சைகள் 2 பேர் மாமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். மதிமுக உறுப்பினர் ஒருவர் கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 10ம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், மேயர் முத்துதுரைக்கு எதிராக சுயேச்சை உறுப்பினர் மற்றும் அதிமுக சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

மேலும், இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பாக அதிமுக மாமன்ற உறுப்பினர் ராம்குமார் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆகஸ்ட் 7ம் தேதி மாநகராட்சி கூட்டம் நடத்தி வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி இன்று காலை காரைக்குடி மாநகராட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த கூட்டத்திற்கு அதிமுக உறுப்பினர்கள் 7 பேரும், சுயேட்சை உறுப்பினர் ஒருவர் உட்பட மொத்தம் 8 பேர் மட்டும் வந்திருந்தனர். இதையடுத்து, போதிய கோரம் இல்லாததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக மாநகராட்சி கமிஷனர் சங்கரன் அறிவித்தார்.